Thursday, 21 July 2011

மாணவர்களும் படிக்கும் ஆற்றலும்




கேள்வி: சாதாரணமாக கணிதத்தில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு எடுப்பது என்பது மிக குறைந்தே காணப்பட்டது. ஆனால் இப்போது ஆயிரக்கணக்கான மாணவர்கள் நூற்றுக்கு நூறு மார்க் எடுக்கிறார்களே இது எப்படி. கல்வி திறன் உயர்ந்ததாலா அல்லது மாணவர்களின் அறிவு திறன் வளர்ந்ததாலா?

பதில்: கல்வி திறன் உயர்ந்ததால் என்று இதை கூற இயலாது. காரணம் கல்வி திறன் உயர்ந்து இருந்தால் தேர்வு எழுதிய எல்லா மாணவர்களுமே மிகுந்த மதிப்பெண்களை பெற்று இருக்க முடியும். ஆனால் திறமையும் அதிக அளவு அறிவு திறனும் உள்ள மாணவர்களே நூறு மார்க்கை பெற்று இருக்கிறார்கள். இன்றய மாணவர்கள் திறன் வாய்ந்தவர்களாகவும் அதிக நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த மாணவர்களின் பெற்றோர்களும் நன்கு படித்த வர்களாக இருப்பது இதற்கு ஒரு தூண்டுகோலாக அமைகிறது. பொறுப்புணர்வுடன் வளரும் குழந்தைகளால் மட்டுமே இதை சாதிக்க இயலும். கல்வி அறிவு என்பது பிறர் தூண்டி வருவது இல்லை, அது இயல்பாக வருவது - தானாக வளர்வது. சாதிக்க நினைக்கும் மனம் இருந்தால் போதும்.

படிப்பும் பதவியும்




கேள்வி: மாணவர்களின் கல்வி இப்போது கேள்வி குறியாகி உள்ள சூழலில், எந்த கல்வியை கற்றால் மாணவனின் எதிர்காலம் நன்றாக அமையும் என்று உறுதியாக கூற இயலவில்லை. டாக்டருக்கு படிக்க வைக்கலாம், என்ஜினீயருக்கு படிக்க வைக்கலாம் என்று இப்போது எல்லோரும் அலைகிறார்கள். படிப்பு இல்லாமல் இருந்தால் மந்திரியாகலாம் என்று இப்போதுள்ள இளைஞர்கள் நினைக்கிறார்கள். இது பற்றி உங்களின் கருத்து என்ன?

பதில்: இன்றைய கால கட்டத்தில் கல்வி கற்காமல் எந்த நல்ல பணியிலும் சேர இயலாது.பியூன் வேலைக்கு கூட கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்த நம் நாட்டில் பிரதமர் ஆவதற்கும், முதல்வர் ஆவதற்கும், கவர்னர் ஆவதற்கும் கல்வி தகுதி அவசியமில்லை. தினத்தந்தியில் வந்த ஒரு செய்தி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. "டீ கடைக்காரர் நிதி அமைச்சர் ஆனார் என்றும், மாடு மேய்த்தவர் கால்நடை அமைச்சர் ஆனார் " என்பதுதான் அந்த செய்தி. எனக்கு கூட படிப்பின் மீது இருந்த ஆர்வம் இப்போது மிகவும் குறைந்து விட்டது. வீட்டில், படிக்காத பிள்ளைகளை "போய் மாடு மேய்" என்று சொல்வார்கள். அது இப்போது உண்மை ஆகிவிட்டது. அதுமட்டுமல்ல, மாடு மேய்த்தால் அமைச்சர் ஆகலாம் என்ற நம்பிக்கை கூட எல்லோருக்கும் வந்து விட்டது. சினிமாவும் அரசியலும் கை கோர்த்து விட்டதால் கல்வியின் மீது இருந்த மரியாதை தமிழ் இளைனர்களின் மனதில் இருந்து மெல்ல மெல்ல விலகி ஓடுகிறது என்பது உண்மை தான். சமூக ஆர்வலர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் இந்த அவலத்தை சீர் செய்வதில் மிகுந்த பொறுப்பு இருக்கிறது.

உயிரை இழக்கும் இளம் கணவன்-மனைவியர்




கேள்வி:குடும்ப தகராறு காரணமாக இளம் கணவன்-மனைவியர் தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறார்களே,இதற்கு மருத்துவ ரீதியாக எந்த பரிகாரமும் கிடையாதா?

பதில்: உயிரை மாய்த்து கொள்வது என்பது தன்னிச்சையாக எடுத்த ஒரு அவசர முடிவு.கணவன் மனைவி பிரச்சினை என்பது எல்லா குடும்பங்களிலும் உள்ள ஒரு சாதாரண சம்பவம் தான். இதற்காக உயிரையே பலி இடுவது என்பது ஏற்றுகொள்ளும் செயலாக தோன்றவில்லை. நவீன கால சூழலில் பேசி தீர்பதற்கான எவ்வளவோ வழிமுறைகள் இருகின்றன. இதை விடுத்து தவறான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். கணவன்-மனைவி பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு என்று பல மன நல மருத்துவ மையங்கள் உள்ளன. பிரச்சினை உள்ளவர்கள் இந்த மருத்துவ மையங்களை அணுகி ஆலோசனைகளை பெறுவது நல்லது. வருமுன் காப்பது என்றும் நலம் பயக்கும்.

இசையும் குழந்தை வளர்ச்சியும்



கேள்வி: நல்ல இசையை செவிமடுக்கும் குழந்தைகள் நல்ல மூளை திறன் கொண்டவர்களாக விளங்குவார்கள் என்ற செய்தி உண்மையா?

பதில்: இது முற்றிலும் உண்மைதான். விண்ணான பூர்வமாக மேல் நாடுகளில் செய்த ஆய்வுகள் இதை உறுதி செய்கின்றன. தாய்மை அடைந்த பெண்கள் கூட நல்ல இனிமையான இசையை சில குறிப்பிட்ட நேரங்களில் தொடர்ந்து கேட்டு வந்தால் குழந்தையின் வளர்ச்சியில் நல்ல பலன்கள் ஏற்படும். தாயின் மன மற்றும் உடல் சோர்வையும் போக்கும் திறன் சிறந்த இசைக்கு உண்டு.

நவீன கால இளம் தம்பதிகள்



கேள்வி: இன்றைய இளம் பெண்கள் அதிலும் குறிப்பாக இளம் மனைவியர் கெட்டு போவதற்கு காரணம் யார்? பெற்றோர்களா அல்லது கணவன்மார்களா?

பதில்: மனநல வல்லுனர்களாலேயே இது போன்ற பிரட்சினைகளுக்கு இப்போது காரணம் கண்டு பிடிக்க இயல வில்லை.மாறிவரும் சமூக சூழல் பெண்களையும் இப்போது வித்தியாசமாக சிந்திக்கவும், செயல்படவும் தூண்டுகிறது.சுயமாக சம்பாதிக்கும் பெண் இப்போது சுயமாக தன் சொந்த விசயங்களில் முடிவு எடுக்கவும் முயற்சி செய்கிறாள். இது பல நேரங்களில் விபரீத முடிவுகளில் கொண்டு போய் சேர்க்கிறது. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கூட பல ஆண்களிடம் தொடர்பு வைத்திரிந்ததால், தன் மனைவியை கொன்றதாக வாக்குமூலம் அளித்திருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இளைனர்களும் சபலங்களும்




கேள்வி: கட்டுபாடான நமது நாட்டில் இப்போது பாலியல் பலாத்கார சம்பவங்கள் மிகவும் அதிக அளவில் நடப்பதற்கு என்ன காரணம்.வயது வித்தியாசம் இல்லாமல் இளைஞர்கள் கெட்டு போவதற்கு எது காரணம் என்று நினைகிறீர்கள்?

பதில்: பக்கத்தில் உள்ள பத்திரிகை செய்தி இதற்கு ஒரு சான்று. பத்திரிகை செய்தியை நான் சொல்வதற்கு காரணம், இவை தான் நாட்டில் நடக்கும் நடப்புகளை, அவல நிலைகளை மக்களுக்கு படம் பிடித்து காட்டும் கண்ணாடிகளாக இப்போது உள்ளன. இளைனர்களின் செக்ஸ் உணர்வுகளை தூண்டும் விதத்தில் இப்போதைய சினிமா காட்சிகள் உள்ளன. மொபைல் போன் மூலம் பரிமாறும் செக்ஸ் தகவல்கள், இணையத்தளம் ஏற்படுத்தும் தாக்கம் இன்றைய இளைனர்களின் மன இயல்புகளை மிகவும் பாதிக்கின்றன. வேலைக்கு செல்லும் இன்றைய பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளின் செயல் பாடுகளில் அதிக கவனம் செலுத்த இயலுவதில்லை.பெண்களின் மிகையான ஆடை அலங்காரங்களும் கூட இளைனர்களின் மனதை மேலும் கெடுக்க வழி செய்கின்றன.உண்மை எது,பொய் எது என்று இனம் பிரித்து பார்க்க இயலாத பருவத்தில் வாழும் இளைஞர்கள் எளிதில் கீழான சபலத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.இது போன்ற அவலமான செயல்கள் மேலும் நிகழாமல் தடுக்கும் வலிமை பெற்றோர்களுக்கு மட்டுமே உண்டு என்பதை தாய் தந்தையர் உணர்ந்து செயல் பட வேண்டும்.

Wednesday, 20 July 2011

குழந்தைகள் கெட்டு போக யார் காரணம்



தாயின் ஒழுக்கம் குழந்தைகளை பாதிக்குமா?

தமிழில் நல்ல ஒரு பழமொழி உண்டு. "நூலை போல சேலை, தாயை போல பிள்ளை" அது போல தாய் தந்தையிரின் குண இயல்புகளும், பழக்க வழக்கங்களும் சிறு குழந்தைகளையும், நன்கு வளர்ந்த இளைனர்களையும் வெகுவாக மனதளவில் பாதிக்கின்றன.தமிழ் பத்திரிகை ஒன்றில் வந்த இந்த செய்தியை சற்று கூர்ந்து படியுங்கள், நான் அதிகம் சொல்லாமலே உங்களுக்கு புரியும். டுயூசனுக்கு வந்த மாணவியின் தாயாருடன் ஆசிரியர் ஓடினால் நாம் பதறுவது இருக்கட்டும் , இந்த இளம் மாணவியின் மன நிலை என்னாகும். இந்த குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தாய்மார்களே இவ்வாறு துணிந்து தவறு செய்தால் இந்த குழந்தைகளை கடினமான மன அதிர்வுகளில் இருந்து எப்படி காப்பாற்ற இயலும்.

Monday, 4 July 2011




கேள்வி: பெரிய மற்றும் சிறந்த தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் மட்டும் தான் சிறந்த மதிப்பெண்களை பெற்று சாதனைகள் படைக்க இயலும் என்று சொல்கிறார்களே இது உண்மையா?

மாணவர்கள் சாதனை படைப்பது என்பது சிறந்த தனியார் பள்ளிகளில் படிப்பதினால் மட்டும் ஏற்பட்டு விடுவதில்லை. இது மாணவர்களின் தனிப்பட்ட திறனையும் அவர்களின் அடிப்படை ஆற்றலையும் அடிப்படையாக கொண்டு அமைகிறது.பெற்றவர்கள் கொடுக்கும் ஊக்கமும், ஆசிரியர்களின் சிறந்த ஆக்கமும் இதற்கு மேலும் வலு சேர்க்கிறது.

வீட்டு வேலை செய்யும் சாதாரண பெண்ணின் மகன் கூட முயன்றால் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைக்க இயலும் என்பதை செய்தி தாள்கள் படம் பிடித்து காட்டுகின்றன. ஒரு மாணவன் முயன்றால் முடியாதது என்று எதுவும் இல்லை என்பதே எனது தீர்க்கமான கருத்து.

Friday, 1 July 2011

இளைனர்களும் மன உணர்ச்சிகளும்



இன்றைய இளைனர்களின் இயல்பான சுய முயற்சிகள் தோல்வி அடைவதற்கு அவர்களின் பெற்றோரே காரணம் என்கிறார்களே - இது உண்மையா?

குழந்தைகளின் சுய முயற்ச்சிகள் தகர்த்து எறியப்படுகின்றன. அவர்களின் சிந்தனைகளுக்கு ஊக்கம் தரப்படுவதில்லை. அவர்களின் திறமைகள் ஊட்டி வளர்க்க படுவதில்லை. குழந்தை எப்படி வர வேண்டும் அல்லது வளர வேண்டும் என்பதை மற்றவர்கள் நிர்ணயிக்க வேண்டிய சூழ்நிலையில் இன்றைய குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் வாழ்கிறார்கள்.

வளரும் இளைனர்களின் மன இயல்புகளை அப்படியே படம் பிடித்து கட்டுகிறார் பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லா. பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து ஒரு பகுதி.

கூச்சம் சந்தேகம் மற்றும் பொறாமை



கூச்சம், சந்தேகம், பொறாமை போன்ற தீய உணர்வுகள் குழந்தைகளையும் பாதிக்குமா? இதை கண்டறிவது எப்படி?

கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகள் எளிதில் கண்டறியப்பட்டால், அவர்களின் குண இயல்பை விரைவில் சீர் செய்ய இயலும். இல்லையெனில் வளர்ந்து வாலிபன் ஆன பின்னும் இந்த சுபாவம் தொடரும். பின்னாளில் இந்த சுபாவம் சந்தேகம், பொறாமை, ஆற்றாமை போன்ற மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தும்.

இக்கால இளம் வாலிப ஆண் மற்றும் பெண்களின் மன இயல்புகள் , உணர்வுகள் பற்றி மிகவும் விரிவாக விளக்குகிறார் பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லா. பிரபல தமிழ் வார இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து ஒரு பகுதி.