Thursday 21 July, 2011

படிப்பும் பதவியும்




கேள்வி: மாணவர்களின் கல்வி இப்போது கேள்வி குறியாகி உள்ள சூழலில், எந்த கல்வியை கற்றால் மாணவனின் எதிர்காலம் நன்றாக அமையும் என்று உறுதியாக கூற இயலவில்லை. டாக்டருக்கு படிக்க வைக்கலாம், என்ஜினீயருக்கு படிக்க வைக்கலாம் என்று இப்போது எல்லோரும் அலைகிறார்கள். படிப்பு இல்லாமல் இருந்தால் மந்திரியாகலாம் என்று இப்போதுள்ள இளைஞர்கள் நினைக்கிறார்கள். இது பற்றி உங்களின் கருத்து என்ன?

பதில்: இன்றைய கால கட்டத்தில் கல்வி கற்காமல் எந்த நல்ல பணியிலும் சேர இயலாது.பியூன் வேலைக்கு கூட கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்த நம் நாட்டில் பிரதமர் ஆவதற்கும், முதல்வர் ஆவதற்கும், கவர்னர் ஆவதற்கும் கல்வி தகுதி அவசியமில்லை. தினத்தந்தியில் வந்த ஒரு செய்தி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. "டீ கடைக்காரர் நிதி அமைச்சர் ஆனார் என்றும், மாடு மேய்த்தவர் கால்நடை அமைச்சர் ஆனார் " என்பதுதான் அந்த செய்தி. எனக்கு கூட படிப்பின் மீது இருந்த ஆர்வம் இப்போது மிகவும் குறைந்து விட்டது. வீட்டில், படிக்காத பிள்ளைகளை "போய் மாடு மேய்" என்று சொல்வார்கள். அது இப்போது உண்மை ஆகிவிட்டது. அதுமட்டுமல்ல, மாடு மேய்த்தால் அமைச்சர் ஆகலாம் என்ற நம்பிக்கை கூட எல்லோருக்கும் வந்து விட்டது. சினிமாவும் அரசியலும் கை கோர்த்து விட்டதால் கல்வியின் மீது இருந்த மரியாதை தமிழ் இளைனர்களின் மனதில் இருந்து மெல்ல மெல்ல விலகி ஓடுகிறது என்பது உண்மை தான். சமூக ஆர்வலர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் இந்த அவலத்தை சீர் செய்வதில் மிகுந்த பொறுப்பு இருக்கிறது.

No comments:

Post a Comment