Saturday, 23 July 2011

தாயின் பாசமும் மனைவியின் அன்பும்




கேள்வி: தாய் பாசம் என்றால் என்ன? தாய் காட்டும் இந்த பாச உணர்வை ஒரு மனைவியால் காட்ட இயலாதது ஏன்?

பதில்: ஒரு ஆணின் வாழ்வில் சில பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தாய், சகோதரி, மனைவி மற்றும் மகள். தாய் பெற்றவள், சகோதரி உடன் பிறந்தவள். இது இரத்த உறவினால் ஆனது. எளிதில் பிரிக்க இயலாதது. மனைவியின் உறவு அவ்வாறு இல்லை. இது இரத்த உறவை அடிப்படையாக கொண்டு அமைவதில்லை. மருத்துவ ரீதியாகவே நெருங்கிய உறவினர்களை திருமணம் செய்வது உகந்த செயல் அல்ல. இரத்த பந்தங்களுக்கு அப்பால் நிகழும் திருமண உறவு காதல் உணர்வை மாத்திரம் கொண்டு அமைவது.அன்பு எனும் பிணைப்பில் இணையும் உறவு இது. இதில் பாசத்திற்கு வழி இல்லை. ஆனால் மனைவி மூலம் பிறக்கும் குழந்தை இரத்த பந்தம் உள்ளது. எனவே மனைவி மட்டுமே ஒரு குடும்பத்தில் சற்று ஒதுங்கி நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே தான் விவாகரத்து என்பது மனைவியை மட்டும் குறி வைத்து நிகழ்த்தபடுகிறது. மனைவியை பிரிந்து வாழும் ஒரு மனிதனால் தன் தாயையும், தன் குழந்தையையும் பிரிந்து வாழ முடிவதில்லை. கணவன் இறந்தால் உயிர் விட துணியும் எந்த மனைவியும் நவீன உலகில் இல்லை. கணவன் இறந்தால் மகிழ்ச்சி அடையும் மனைவியரே இவ்வுலகில் அதிகம். இறந்த மகனின் இறப்பு ஒரு தாய்க்கு பேரிழப்பு தான். மகனே போனபின் வாழ்ந்து தான் என்ன பயன்?

No comments:

Post a Comment