Thursday 21 July, 2011

உயிரை இழக்கும் இளம் கணவன்-மனைவியர்




கேள்வி:குடும்ப தகராறு காரணமாக இளம் கணவன்-மனைவியர் தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறார்களே,இதற்கு மருத்துவ ரீதியாக எந்த பரிகாரமும் கிடையாதா?

பதில்: உயிரை மாய்த்து கொள்வது என்பது தன்னிச்சையாக எடுத்த ஒரு அவசர முடிவு.கணவன் மனைவி பிரச்சினை என்பது எல்லா குடும்பங்களிலும் உள்ள ஒரு சாதாரண சம்பவம் தான். இதற்காக உயிரையே பலி இடுவது என்பது ஏற்றுகொள்ளும் செயலாக தோன்றவில்லை. நவீன கால சூழலில் பேசி தீர்பதற்கான எவ்வளவோ வழிமுறைகள் இருகின்றன. இதை விடுத்து தவறான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். கணவன்-மனைவி பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு என்று பல மன நல மருத்துவ மையங்கள் உள்ளன. பிரச்சினை உள்ளவர்கள் இந்த மருத்துவ மையங்களை அணுகி ஆலோசனைகளை பெறுவது நல்லது. வருமுன் காப்பது என்றும் நலம் பயக்கும்.

No comments:

Post a Comment