Thursday 21 July, 2011

இளைனர்களும் சபலங்களும்




கேள்வி: கட்டுபாடான நமது நாட்டில் இப்போது பாலியல் பலாத்கார சம்பவங்கள் மிகவும் அதிக அளவில் நடப்பதற்கு என்ன காரணம்.வயது வித்தியாசம் இல்லாமல் இளைஞர்கள் கெட்டு போவதற்கு எது காரணம் என்று நினைகிறீர்கள்?

பதில்: பக்கத்தில் உள்ள பத்திரிகை செய்தி இதற்கு ஒரு சான்று. பத்திரிகை செய்தியை நான் சொல்வதற்கு காரணம், இவை தான் நாட்டில் நடக்கும் நடப்புகளை, அவல நிலைகளை மக்களுக்கு படம் பிடித்து காட்டும் கண்ணாடிகளாக இப்போது உள்ளன. இளைனர்களின் செக்ஸ் உணர்வுகளை தூண்டும் விதத்தில் இப்போதைய சினிமா காட்சிகள் உள்ளன. மொபைல் போன் மூலம் பரிமாறும் செக்ஸ் தகவல்கள், இணையத்தளம் ஏற்படுத்தும் தாக்கம் இன்றைய இளைனர்களின் மன இயல்புகளை மிகவும் பாதிக்கின்றன. வேலைக்கு செல்லும் இன்றைய பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளின் செயல் பாடுகளில் அதிக கவனம் செலுத்த இயலுவதில்லை.பெண்களின் மிகையான ஆடை அலங்காரங்களும் கூட இளைனர்களின் மனதை மேலும் கெடுக்க வழி செய்கின்றன.உண்மை எது,பொய் எது என்று இனம் பிரித்து பார்க்க இயலாத பருவத்தில் வாழும் இளைஞர்கள் எளிதில் கீழான சபலத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.இது போன்ற அவலமான செயல்கள் மேலும் நிகழாமல் தடுக்கும் வலிமை பெற்றோர்களுக்கு மட்டுமே உண்டு என்பதை தாய் தந்தையர் உணர்ந்து செயல் பட வேண்டும்.

No comments:

Post a Comment