Thursday, 21 July 2011

மாணவர்களும் படிக்கும் ஆற்றலும்




கேள்வி: சாதாரணமாக கணிதத்தில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு எடுப்பது என்பது மிக குறைந்தே காணப்பட்டது. ஆனால் இப்போது ஆயிரக்கணக்கான மாணவர்கள் நூற்றுக்கு நூறு மார்க் எடுக்கிறார்களே இது எப்படி. கல்வி திறன் உயர்ந்ததாலா அல்லது மாணவர்களின் அறிவு திறன் வளர்ந்ததாலா?

பதில்: கல்வி திறன் உயர்ந்ததால் என்று இதை கூற இயலாது. காரணம் கல்வி திறன் உயர்ந்து இருந்தால் தேர்வு எழுதிய எல்லா மாணவர்களுமே மிகுந்த மதிப்பெண்களை பெற்று இருக்க முடியும். ஆனால் திறமையும் அதிக அளவு அறிவு திறனும் உள்ள மாணவர்களே நூறு மார்க்கை பெற்று இருக்கிறார்கள். இன்றய மாணவர்கள் திறன் வாய்ந்தவர்களாகவும் அதிக நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த மாணவர்களின் பெற்றோர்களும் நன்கு படித்த வர்களாக இருப்பது இதற்கு ஒரு தூண்டுகோலாக அமைகிறது. பொறுப்புணர்வுடன் வளரும் குழந்தைகளால் மட்டுமே இதை சாதிக்க இயலும். கல்வி அறிவு என்பது பிறர் தூண்டி வருவது இல்லை, அது இயல்பாக வருவது - தானாக வளர்வது. சாதிக்க நினைக்கும் மனம் இருந்தால் போதும்.

No comments:

Post a Comment