Saturday 23 July, 2011

காதலும் கொலை வெறியும்




கேள்வி: பழி வாங்கும் மன இயல்பு காதலர் மத்தியில் அதிகம் பரவுவதற்கு என்ன காரணம்? ஒருவரை காதலிப்பதும், பிடிக்காவிட்டால் வேறு ஒருவரை திருமணம் புரிவதும் தனிமனித சுதந்திரம். காதலனோ அல்லது காதலியோ விரும்பும் வகையில் அமையாவிட்டால் அதை தவிர்த்து, மனதுக்கு பிடித்த வேறு ஒருவரை மணப்பதில் என்ன தவறு. இதற்காக கொலை செய்ய துணிவது எந்த விதத்தில் நியாயம்?

பதில்: காதல் என்றால் என்ன? இந்த உணர்வை பற்றி ஒரு தெளிவான அறிவு இக்கால இளைனர்களுக்கு அவசியம் தேவை.ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ பார்த்த மாத்திரத்தில் ஏற்படும் ஈர்ப்பு நிச்சயமாக காதல் ஆகாது. இந்த ஈர்ப்பு பெரும்பாலான இளைனர்களுக்கு ஏற்படுவது என்பது இயல்பான ஓன்று தான். இது காதலாக பரிணமிக்க சில காலம் ஆகலாம். இது தன் சுயநலம் கருதி தன் வாழ்க்கை துணையை தெளிவாக, திறமையாக தேர்வு செய்யும் ஒரு வழிமுறை என்று தான் சொல்ல வேண்டும். தற்கால இளைனர் சமுதாயம், சினிமாவை போன்று காதலையும் ஒரு வியாபார யுக்தியாகவே கையாள துவங்கி விட்டது. தனக்கு ஏற்ற வரன் பார்க்கும் வைபவமாகவே காதல் கொள்வதும் ஆகிவிட்டது. இதை ஊக்க படுத்தவே ஏராளம் இனைய தளங்களும் இப்போது வர துவங்கி விட்டன. காதல் செய்வதை இந்த இணைய வலைகள் மிகவும் எளிமை ஆக்கிவிட்டன. காதல் இப்போது தன் பரிசுத்த தன்மையை இழந்து வெகு காலம் ஆகிவிட்டது. காதலிப்பது, அதை படமாக்குவது,இணைய தளத்தில் வெளி இடுவேன் என்று பயமுறுத்துவது, மிரட்டுவது, பணம் பறிப்பது, தவறான தகவல்களை பரப்புவது, எதிர்த்தால் அல்லது வேறு ஒருவரை மணக்க இருந்தால் அல்லது மணமுடித்தால் கொலையும் செய்வது என்பது இப்போது சகஜமாகிவிட்டது. தூய காதல் இவ்வாறெல்லாம் செய்ய தூண்டாது.

No comments:

Post a Comment