Friday 22 July, 2011

அதிக பணம் சம்பாதிப்பது கிரிக்கெட் வீரர்களா அல்லது படித்த பட்டதாரிகளா




கேள்வி:படித்து பட்டதாரிகளாகி சம்பாதிப்பதை விட சினிமாவிலோ அல்லது கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளிலோ குழந்தைகளை ஈடுபடுத்தினால் அவர்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும்,மேலும் அவர்களால் கை நிறைய பணம் சம்பாதிக்க இயலும் என்று சொல்கிறார்களே, இது பற்றி தங்கள் கருத்து என்ன?

பதில்: தற்போதுள்ள சூழ்நிலையில் அதிகம் படிக்காத, மற்றும் பட்டங்கள் எதுவும் பெறாத கிரிக்கெட் வீரர்கள் கோடி கணக்கில் பணம் சம்பாதிப்பதை பற்றி நீங்கள் எண்ணுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.இது உண்மை தான். நான் மறுக்கவில்லை. எல்லா மாணவர்களும் கிரிக்கெட் வீரர்களாகவும்,நடிகர்களாகவும் ஆகி விட்டால் இவர்கள் விளையாட்டை பார்த்து ரசிக்க ஆள் கிடைக்கமாட்டார்கள். கிரிக்கெட், சினிமா போன்ற துறைகள் படிப்பை அடிப்படையாக வைத்து இளைனர்களை தேர்வு செய்வதில்லை. இந்த துறையை சேந்தவர்கள் அபாரமான பயிற்சி திறன் அல்லது திறமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். இது எளிய செயல் அல்ல. விளையாட்டில் திறமையை வெளிபடுத்துவது கூட ஒரு நுண்ணறிவுதான். 'மல்டிபிள் இன்டலிஜென்ஸ்' என்று அறிவை வகை படுத்தும் பிரிவில் விளையாட்டு திறனும் உண்டு. இது போலவே இசை ஞானம் உள்ளவர்கள் இசை மேதை களாகவும்,நடிப்பாற்றல் மிக்கவர்கள் சிறந்த நடிகர்களாகவும் தங்களை உருமாற்றி கொள்கிறார்கள்.இந்த ஆற்றல்களை பெற கல்வியறிவு அவசியம் இல்லை.வளரும் குழந்தைகளுக்கு நீங்கள் விரும்புவதை திணிக்காமல் ,அவர்கள் விரும்புபுவது எது என்பதை கண்டறிந்து அவர்களை அந்த துறைகளில் புகுத்தினால், அவர்கள் அந்த துறைகளில் நிபுணர்களாக மாற அதிகம் வாய்புகள் உண்டு.

No comments:

Post a Comment