Thursday 21 July, 2011

படிப்பில் சிறந்து விளங்குவது மாணவியா அல்லது மாணவனா?




கேள்வி: இப்போதுள்ள மாணவர்கள் கல்வியில் பின்தங்குவதற்கு என்ன காரணம்? பெண் குழந்தைகள் மாணவர்களை விட நன்றாக படிக்கிறார்களே இது எதனால்? மாணவர்களின் கவனம் படிப்பில் சிதறுவதற்கு என்ன காரணம்? இதை சரி செய்வது எப்படி?

பதில்:நீங்கள் சொல்வது உண்மைதான். சமீபத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஐந்து மாணவிகளே முதல் இடத்தை பிடித்து உள்ளனர். மாணவிகள் பொதுவாகவே கல்வியில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.இந்த ஆர்வம் பொதுவாக மாணவர்களிடம் இப்போது இல்லை. நவீன சூழலில் வாழும் இக்கால இளைஞர்கள் படிப்பில் அதிக ஆர்வம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். சினிமா,இன்டர்நெட், மொபைல் காதல் வலைகளில் சிக்கி தடுமாறுகின்றனர். காதலிப்பது என்பது ஒரு கௌரவ பிரட்சினையாக மாணவர்களிடம் ஏற்பட்டு விட்டது. நண்பர்களின் சகவாசமும் அவர்கள் கொடுக்கும் ஆதரவும் இதற்கு பெரும் துணையாக அமைகிறது. பெற்றோர்களின் எந்த அறிவுரையும் இவர்கள் காதுகளில் ஏறுவதில்லை. படிப்பில்லாமல் கூட வாழ முடியும் என்ற சித்தாங்கம் இவர்களை ஆட்டுவிக்கிறது. இது இப்போது எல்லா மட்ட மாணவர்களையும் பாதிக்க துவங்கி விட்டது.பெரும்பாலான பெற்றோர்களை துயருக்கு உள்ளாக்கும் ஒரு அவல நிலையாக இது மாறிவிட்டது. எந்த மாணவனையும் பெற்றோர்களால் கட்டுபடுத்த இயலவில்லை. இளம் மாணவர் நலனில் அக்கறை காட்டும் கல்வியாளர் மத்தியில் இது இப்போது ஒரு கேள்விக்குறியாகவே ஆகி விட்டது. மனநல மருத்துவர்களை இது போன்ற பிரட்சினைகளுக்காக, பெற்றோர்கள் நாடுவது இப்போது சகஜம் ஆகிவிட்டது. நல்ல ஆலோசனைகள் மூலமும், சிறந்த பயிற்சிகளின் மூலமும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த இயலும்.

No comments:

Post a Comment