Sunday 24 July, 2011

ஏமாற்றம் தரும் காதல்




கேள்வி: அழகான பெண்ணை பார்த்தால் காதல் வருமா அல்லது அந்தஸ்து, பணம்,புகழ், பதவி உள்ள பெண்ணை பார்த்தால் காதல் வருமா? காதலித்த நபரை கைவிடுவதில் கை தேர்ந்தவர் யார்? ஆணா-அல்லது பெண்ணா?

பதில்: காதலிப்பதில் ஒரு முக்கிய நோக்கம் இருக்கிறது. காதலிப்பது என்பது இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஒரு சமூக அந்தஸ்தாக மாறிவிட்டது. அதிக ஆண் அல்லது பெண் நண்பர்களை பெற்றவர்களே கல்லூரிகளில் 'ஹீரோ' வாக பவனி வருகிறார்கள். இந்த அந்தஸ்தை பெறுவதற்கு கல்லூரிகளில் கடும்போட்டியும் நிலவுகிறது. காதலிப்பவர் இடையேயும் போட்டியும்,பொறாமையும் நிகழ்கிறது. நீண்ட நாள் காதலர்கள் பிரிவதும், புதியவர்கள் அந்த இடத்தை நிரப்புவதும் காதலின் தூய்மையை கெடுத்துவிட்டது. 'காசிருந்தால் வாங்கலாம் - ஐயோ பாவம்', என்ற கண்ணதாசனின் கவிதைக்கு ஏற்ப காதல், தன் கண்ணியத்தை இழந்து தலைகுனிந்து நிற்கிறது. தூய்மை இல்லாத காதல் பெரும் தோல்விகளையே இப்போது சந்தித்து வருகிறது. சிலர் நீங்கள் குறிப்பிடுவது போல் அழகுக்காக காதலிக்கிறார்கள், பலர் பணத்திற்காகவும் காதலிக்கிறார்கள். வெகு சிலரே காதலுக்காக வாழ்கிறார்கள், அது கிடைக்காதபோது உயிரை இழக்கவும் தங்களை தயார் படுத்திகொள்கிறார்கள். தூய்மையான காதலர்கள், காதலிப்பவர்களை எக்காலத்திலும் கை விட மாட்டார்கள். வேறு துணையை நாடி ஓடமாட்டார்கள். வேறு வாழ்கை துணையை நாடுபவர்களை சட்டத்தாலோ அல்லது போலீசாலோ தடுத்தி நிறுத்த முடியாது. சட்டத்தை காட்டி பிடிக்காதவரை காதல் செய்ய வைக்கவோ அல்லது கட்டாய திருமணம் செய்து கொள்ள வைக்கவோ இயலாது என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment