Saturday, 23 July 2011

மொபைல் போனும் சந்தேகமும்




கேள்வி: எல்லா குழந்தைகளுமே இப்போது சர்வ சாதாரணமாக மொபைல் போன், இன்டர்நெட் வசதிகளோடு தான் வாழ்கிறார்கள். இது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒரு பொருளாக மாறிவிட்டது. குழந்தைகளுக்கு , அவர்களின் நண்பர்களிடம் இருந்து வரும் குறுந்தகவல்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் இப்போது அவர்களின் பெற்றோர்களிடம் மேலோங்கி வருகிறது. இதை இக்கால இளைஞர்கள் தங்களின் தனி அந்தரங்க வாழ்விலும், தனிமனித சுதந்தரத்திலும் பெற்றோர்கள் தேவைஇன்றி மூக்கை நுழைப்பதாக எண்ணுகிறார்கள். இதை நிவர்த்தி செய்வது எப்படி. இது விசயத்தில் பெற்றோரின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்.

பதில்: மாடேர்னாக மாறி வரும் இளம் தலைமுறை விசயத்தில் மிகவும் கவனமாகவும், லாகவமாகவும் நடந்து கொள்வதில் பெற்றோர்கள் அக்கறை காட்டவேண்டும். ஒரு குறிப்பிட்ட வயதுவரை உங்கள் மொபைல், கம்ப்யூட்டர் மூலம் குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன், உங்களின் அனுமதி பெற்று தகவல்களை பரிமாற அனுமதி வழங்கலாம். இதன் மூலம் உங்கள் குழந்தைகளின் நெருங்கிய நண்பர்களை பற்றியும், அவர்கள் பரிமாறும் செய்திகள் பற்றியும் ஓரளவு புரிந்து கொள்ள இயலும். உங்கள் மனதிற்கு கவலை தரும் செய்திகள் பரிமாற பட்டால் உங்கள் குழந்தைகளை பக்குவமாக நீங்கள் எச்சரிக்கலாம். இதற்காக அவர்களை கண்டபடி அடிப்பதும், திட்டுவதும்,வீண் சந்தேகம் கொள்வதும் எதிர்மறை எண்ணங்களை அவர்கள் மனதில் ஏற்படுத்தும். உங்கள் மீது அதிக கோபம் கொள்ளவும் வைக்கும். பெண் குழந்தைகள் விசயத்தில் நீங்கள் எடுக்கும் அவசர முடிவுகளால் அவர்கள் உயிர் இழக்கவும் நேரிடலாம். ஒரு குழந்தை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு பெற்றோகள் காரணமாக இருக்க கூடாது என்பது என் எண்ணம்.

No comments:

Post a Comment