Saturday 23 July, 2011

காதலும் பழிவாங்கும் உணர்வும்




கேள்வி: காதலிப்பது, அதை பெற்றோர் எதிர்ப்பது,பின் வேறு வரன் தேடுவது, இதை அறியும் காதலன் மணப்பெண்ணை கடத்துவது அல்லது கொலை செய்வது - இந்நிலை இப்போது சர்வ சாதாரண நிகழ்வாகிவிட்டது. சமூக பிரட்சினையகிவிட்ட இந்நிகழ்வுகளுக்கு தங்களின் ஆலோசனை என்ன?

பதில்: சமூக மாற்றங்கள் எல்லா குடும்பங்களையும் நேரடியாக ஆக்ரமிக்க துவங்கிவிட்டன. கடந்த பத்துஆண்டுகளாக சர்வமும் தலை கீழாக மாறி விட்டது.சினிமா,மொபைல்,இன்டர்நெட் செய்தி பரிமாற்றங்கள் இளைனர்களின் காதல் தாகத்தை மேலும் அதிகபடுத்திவிட்டன. காதலிக்கும் இளைனன் ஒரு விதமான 'பொசசிவ்' மனப்பான்மைக்கு அடிமையாகி விடுகிறான்.தான் காதலிக்கும் பெண் தனக்கே உரியவள் என்ற அபரிதமான நம்பிக்கை அவளையே மனைவியாக அடைய துடிக்கிறது. இது கை கூடாத போது பழிவாங்கும் எண்ணம் மேலோங்குகிறது. இதுவே காதலியை கொலை செய்யும் அளவுக்கு காதலனை தூண்டுகிறது. பெற்றோர்களின் நல்ல அரவணைப்பும், தனது குழந்தைகளை பற்றிய முழு விபரங்களையும், அவர்களின் நடத்தை பற்றிய பொதுவான செய்திகளை அவர்களின் நெருங்கிய நண்பர்களின் மூலம் அறிந்துகொள்வதன் மூலமும், தேவையான ஆலோசனைகளை முன்கூட்டியே வழங்குவது மூலமும் குழந்தைகளை ஓரளவு தங்களின் கட்டுபாட்டில் வைத்துகொள்ள ஏதுவாகும். தாய்-தந்தையரின் மேம்பாடான ஒழுக்கமும் இதற்கு மிகவும் அவசியம். நல்ல பெற்றோர்கள் கூட ஒரு விதத்தில் நல்ல ஆலோசகர்களே.

No comments:

Post a Comment