Sunday 24 July, 2011

பெண் குழந்தைகள் சந்திக்கும் கொடுமைகள்




கேள்வி: சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வது ஏன்? இது மன நோயின் வெளிப்பாடா? இது போன்ற செக்ஸ் வன்முறைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

பதில்: இந்த தகாத செயலை செய்யும் ஆண்கள் சில நேரங்களில் மன நோய்க்கு ஆட்படடவரகாவே இருக்கிறார்கள். தங்கள் மனைவியரை செக்ஸ் உறவில் திருப்தி செய்ய இயலாத ஆண்கள் தங்கள் பலவீனத்தை தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப சிறுமிகளை ஏமாற்றி, அல்லது பயமுறுத்தி, மனைவிகளிடம் அடைய முடியாத சில வேட்கைகளை தணித்து கொள்ள, குழந்தைகளை உறவுக்கு பயன்படுத்திகொள்கின்றனர். குழந்தைகள் எதிர்ப்பு தெரிவிக்க இயலாதவர்கள் என்பதாலும், இதை பற்றிய தெளிந்த அறிவு இல்லாமையாலும் இந்த கயவர்கள் இந்த பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். இந்த தவறை தொடர்ந்து செய்பவர்களை 'சோசியோபத்' அல்லது 'சைகோபத்' என்றே மனநல வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் தங்கள் இரையை மிகவும் லாகவமாக வேட்டையாடுவதில் வல்லவர்கள். குழந்தைகளுக்கு வேண்டிய மிகவும் நெருங்கிய உறவினர் அல்லது பாதுகாப்பு வழங்குவோரே தங்களுக்கு அளிக்கப்பட்ட நம்பிக்கையை, தவறாக பயன்படுத்தி இந்த குழந்தைகளை வலையில் வீழ்த்தி சீரழித்து விடுகின்றனர். குழந்தைகளின் பெற்றோர் இது போன்ற உறவினர்களின் கைகளில் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்புக்காக விட்டு செல்வதை முடிந்தவரை தவிர்க்கவேண்டும். அப்படியே சில நேரங்களில் விட்டு போக நேர்ந்தாலும், வீடு திரும்பிய பின் நடந்த விசயங்களை பொறுப்புடன் பேசி கண்டறிய வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் தாயிடம் எல்லா உண்மை களையும் விரிவாக சொல்லி விடும். குறிப்பாக தேவை இல்லாமல் உடல் பாகங்களில் தொடுவது - தொட்டால் அதை தவிர்ப்பது போன்ற அத்தியாவசியமான ஒழுக்க நெறிமுறைகளை குழந்தைகளுக்கு பயிற்றுவிப்பதின் மூலம் இந்த சீரழிவில் இருந்து சிறு குழந்தைகளை காத்திட இயலும்.

No comments:

Post a Comment