Thursday, 21 July 2011

தாயை போல பிள்ளை



கேள்வி: தாய்-தந்தையரின் நடத்தைகள், கெட்ட பழக்க வழக்கங்கள் குழந்தைகளை பாதிக்குமா? இதை தடுக்கும் வழிகள் என்ன?

பதில்: தாய் - தந்தையரின் நடத்தைகள் நிச்சயமாக குழந்தைகளை பாதிக்கும். தந்தையை விட தாயின் பழக்க-வழக்கங்களே குழந்தைகளை அதிகம் பாதிக்கின்றன. தாயின் அரவணைப்பில் எப்போதும் வளரும் ஒரு குழந்தையால் தன் தாயின் மன உணர்சிகளை வெகு எளிதில் புரிந்து கொள்ள இயலும். தாயின் எல்லா செயல்களும், நடவடிக்கைகளும் குழந்தையின் அடி மனதில் மிக ஆழமாக பதிந்து விடுகின்றன. அறிந்து கொள்ள இயலாத சிறு பிள்ளை பருவத்தில் நிகழும் இந்த உணர்வுகள் வடுக்களாக மாறி விடுகின்றன. ஆழ் மனதில் நிகழும் இந்த ரசாயன மாற்றங்கள் பின்னாளில் வளரும் குழந்தைகளின் ஹார்மோன்களை தட்டி விட அவை வளரும் குழந்தைகளின் மனதிலும், உடலிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதை புரிந்து குழந்தைகளை வளர்க்க தெரியாத பெற்றோர்களின் குழந்தைகளே, வளர்ந்து வாலிபன் ஆன பின்னர் அதிக மன உளைச்சலுக்கு ஆட்படுகின்றனர். தாய்-தந்தையரின் ஆக்ரோசமான சண்டை காட்சிகள் சிறு குழந்தைகளை மிகவும் கடுமையான மன அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. இது போன்ற விசயங்களில் நாகரிக சூழலில் வாழும் இளம் தம்பதியர் அதிக கவனமுடன் இருப்பது நல்லது.

No comments:

Post a Comment