Thursday 21 July, 2011

படிக்காத பெற்றோரும் புத்திசாலி பிள்ளைகளும்



கேள்வி: படித்த பெற்றோர்களின் குழந்தைகள் தான் நன்கு படித்து வாழ்வில் முன்னேறுகிறார்கள் என்பது உண்மையா?

பதில்: நிச்சயமாக இது உண்மை இல்லை. படிக்காத பெற்றோர்களுக்கு பிறந்த ஏராளமான குழந்தைகள் நன்கு படித்து வாழ்வில் பெரிய அளவில் உயர்ந்து இருக்கிறார்கள் என்பது தான் முழு உண்மை. முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் இதற்கு ஒரு நல்ல உதாரணம். நான் சந்தித்த ஏராளமான ஐ.எ.எஸ்.மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெற்றோர்கள் பெரிய படிப்பு படித்தவர்களாக இல்லை. மேலும் அவர்களில் பெரும்பாலோர் எளிய குடும்பத்தை சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.இதில் அதிசயம் என்னவென்றால் இந்த பெரிய அதிகாரிகளின் பிள்ளைகள் எவருமே ஐ. எ.எஸ். ஆகவோ அல்லது ஐ.பி. எஸ். ஆகவோ இல்லை. பெரும்பாலான அதிகாரிகளின் குழந்தைகள் டாக்டர் அல்லது எஞ்சினீர் போன்ற துறைகளையே தேர்வு செய்கின்றனர். துப்புரவு தொழிலாளியின் மகன் முதல் இடமும், ஆட்டோ டிரைவரின் மகள் இரண்டாம் இடமும் பெற்று கல்வியில் உயர்ந்து விளங்குவது வியப்பான விஷயம் இல்லை என்றாலும் மகிழ்ந்து பாராட்ட தக்கது. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று இந்த குழந்தைகள் நிரூபித்து காட்டி இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment