Thursday 21 July, 2011

வயதை மீறிய மன வளர்ச்சியில் இக்கால குழந்தைகள்




கேள்வி: பண்டை காலங்களில் முத்தம் என்ற சொல்லை பயன்படுத்தவே பத்திரிகைகள் கூச்சப்படும். இது போன்ற சொற்களை எவரும் பயன் படுத்தினால் அவர்களை அருவருப்புடன் நோக்கிய காலம் ஓன்று இருந்தது. எங்கே முத்தம் கொடுப்பது என்று நேரடியாவே எழுதுகிறார்களே - இதை படிக்கின்ற இளைஞர்கள் கெட்டு போக மாட்டார்களா?

பதில்: இந்த கேள்வியை வைத்தே உங்கள் வயதை என்னால் சற்று யூகிக்க முடிகிறது. இப்போதுள்ள குழந்தைகள் இதை படித்து ஒன்றும் கெட்டு போகமாட்டார்கள். சினமாவிலும், டிவியிலும் இந்த காட்சிகளை தான் இக்கால சிறுவர்கள் கண்டு களிக்கிறார்கள்- அதுவும் பெற்றோர்கள் அருகில் இருந்தே பார்த்து ரசிக்கிறார்கள். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வயதானவர் நிலைக்கு இன்றைய குழந்தைகள் தள்ள படுகிறார்கள் என்பது தான் உண்மை. சிற்றின்ப, சல்லாப வார்தைகளின் அர்த்தங்கள் எல்லாம் பள்ளி சிறுவர்களுக்கு இப்போது அத்துபடியாகி விட்டது. பெரியவர்களுக்கே பாடம் சொல்லித்தரும் நிலையில் அவர்களின் இந்த அறிவு வளர்ந்து விட்டது. இது காலத்தின் பரிணாம வளர்ச்சியா அல்லது குழந்தைகளின் எதிர்கால வளமான வாழ்கையை மாசு படுத்தும் அபாய அறிவிப்பா என்பதை வரும்காலம் தான் உணர்த்த வேண்டும். குழந்தைகளை பொறுப்புள்ள நல்ல ஒரு குடிமகனாக உரு மாற்றும் திறன் தாய்- தந்தையிரின் கைகளில் தான் இருக்கிறது. எது நல் வழி, எது கெட்ட வழி என்பதை பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

No comments:

Post a Comment