Friday, 22 July 2011

விவாகரத்தும் குழந்தைகளும்




கேள்வி: விவாகரத்து செய்து கொண்ட தம்பதியரின் குழந்தைகள் அதிக அளவு மன அழுத்தத்தால் பாதிக்கபடுவது ஏன்? இம்மாதிரி இக்கட்டான சூழலில் வாழும் குழந்தைகள் யாரின் அரவணைப்பில் வாழ விரும்புகிறார்கள். தாயின் அரவனைப்பிலா அல்லது தந்தையின் பாதுகாப்பிலா?

பதில்: சாதாரணமாகவே விவாகரத்து செய்த பெற்றோர்களின் குழந்தைகள் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்பது உண்மைதான். தாய்- தந்தை உறவில் ஏற்படும் விரிசல் இளம் குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிந்து ஆற இயலாத மன வடுக்களை கடுமையாக ஏற்படுத்தி விடுகிறது.இது படிப்படியாக வளர்ந்து பயத்தையும், சொல்ல இயலாத மன கலக்கத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.இது பெற்றோர்களின் மீது வைத்திருந்த நம்பிக்கையை தகர்க்கிறது.மெதுவாக குழந்தைகள் தங்கள் பாதுகாப்பின்மையை உணர துவங்குகிறார்கள்.பெற்றோர்கள் காட்டும் பாசம் போலியானது என்பதை உணரும் குழந்தைகள் ஏமாற்றத்தால் துவண்டு போய் விடுகிறார்கள்.தன்னை உண்மையில் பாதுகாப்பவர் எவர் என்பதை விரைவில் உணர்ந்து கொள்கிறார்கள்.அதன் அடிப்படையில் அவர்கள் எடுக்கும் முடிவே விவேகமானது. பிரச்சினைக்கு அடிப்படை காரணம் யார் என்பதை குழந்தைகள் மிகவும் சுலபமாக யூகித்து விடுகின்றன. இதன் பின்னரே யாரோடு வாழ்ந்தால் பாதுகாப்பு என்பதை அறிந்து அவரோடு முழுமையாக தன்னை இணைத்து கொள்கிறது குழந்தை.இந்த பத்திரிகை செய்தியின் படி மகன் தந்தையின் பாது காப்பில் வாழவிரும்புவது தெரிகிறது.அவன் தாயை வெறுப்பதும் புரிகிறது.

No comments:

Post a Comment