Saturday, 23 July 2011

கற்பழிப்பவன் ஒரு மன நோயாளியா?



கேள்வி: நெஞ்சை உலுக்கும் கற்பழிப்பு சம்பவங்கள் இப்போது அதிக அளவில் நடப்பதற்கு என்ன காரணம்? இளைய சமுதாயம் இவ்வாறு நெறி தவறி நடப்பது எதனால்? சினிமாவில் வரும் கற்பழிப்பு காட்சிகளின் தாக்கமா அல்லது அரை-குறை ஆடைகளுடன் தங்களின் உடம்பின் பெரும்பகுதியை ரசிகர்களுக்கு விருந்தாக்கி கவர்ச்சி காட்டும் நடிகைகளின் பெருந்தன்மையா?

பதில்: கவர்ச்சி காட்டுவதை பெருந்தன்மை என்று நீங்கள் குறிப்பிடுவது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. 'பெர்வெர்சன்' என்று வேண்டுமானால் இதை குறிப்பிடலாம். தமிழ் சினிமாக்களில் தற்போது வரும் காட்சிகள் சற்று மிகையாகவே இருக்கிறது. அளவுக்கு அதிகமான செக்ஸ் தூண்டுதலும், அதை சற்றும் அனுமதிக்காத குடும்ப மற்றும் சமூக கட்டுபாட்டில் வாழும் இன்றைய இளைனர்கள் ஒரு வித இரண்டு-கெட்டான் சூழலில் வாழ்கிறார்கள். சினிமாவில் காணும் சில அவல நிகழ்சிகளை, நிஜ வாழ்விலும் அரங்கேற்ற துடிக்கும், உணர்சிகளை அடக்க இயலாத சில பொல்லாத இளைனர்களின் கீழ் தர செயல்பாட்டின் தாக்கமே இது போன்ற நிகழ்வுகள் நடக்க காரணமாகின்றன. சினிமாவை மட்டும் காரணமாக சொல்ல இயலாது. இன்டர்நெட், மொபைல் வசதிகள் இந்த வாய்பை மேலும் அதிகரிகின்றன. நல்ல குடும்ப அமைப்பும், பெற்றோர்களின் மேலான அரவணைப்பும், நல் ஆலோசனைகளும் , நல் ஒழுக்க பயிற்சிகளும் நல்ல ஆரோக்கியமான இளைனர் சமுதாயத்தை உருவாக்க பயன்பெறும். பெற்றோர்களின் பங்கு இந்த விசயத்தில் அத்தியாவசிய தேவையாகும்.

No comments:

Post a Comment