Friday 22 July, 2011

இளைனர்களும் காதல் தோல்விகளும்




கேள்வி: தேர்வில் தோற்றால் சாதாரணமாக சில தற்கொலைகள் நிகழும். இப்போது காதல் தோல்வி என்றால் கூட இளைனர்களும்,மாணவர்களும் அதிக அளவில் தற்கொலை செய்கிறார்களே இது ஏன்?

பதில்: சாதரணமாகவே எல்லா தோல்விகளுமே தற்கொலை எண்ணத்தை தூண்டத்தான் செய்கின்றன.என்றாலும் காதல் தோல்விகளே அதிகம் தற்கொலைகளில் முடிகின்றன.காதல் தோல்விகள் மாணவிகளுக்கு மான பிரட்சினையாக இன்றும் இருப்பதால் அவமானம் தாங்காமல் தான் இந்த இளம் பெண்கள் தற்கொலையை நாடுகின்றனர்.சமுதாயமும் அவர்களை குற்ற நோக்கோடு தான் எடை போடுகிறது. பெற்றோர்களும், உறவினர்களும் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், குறிப்பாக மாணவிகள் எதுவும் செய்ய இயலாமல் இந்த கோர முடிவை மேற்கொள்கின்றனர். சினிமா போதிக்கும் காதல் கருத்துகள் திரையில் பார்த்து ரசிக்க தக்கவையாக இருக்கிறதே தவிர, சமுதாய நிஜ வாழ்வுக்கு வாழ்த்துரை வழங்க தயாராக இல்லை. சினிமா கருத்துகளாலும், கதைகளாலும், காவியங்களாலும் தூண்டப்படும் இளம் மாணவ,மாணவியர், இந்த கொள்கை களை எல்லாம் வாழ்வில் கடை பிடிக்க வழியில்லாமல் ஒரு வித இரு மாறுபட்ட மன போராட்டத்தில் சிக்கி தடுமாறுகின்றனர். காதல் குறித்த அல்லது காதல் மணம் குறித்த பரந்த கருத்து பரிமாற்றங்களுக்கு, அது பற்றிய ஆக்க பூர்வமான விவாதங்களுக்கும் இளம் பெற்றோர்கள் முன் வந்தால் மாத்திரமே இது போன்ற காதல் தோல்விகளால் ஏற்படும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த முடியும்.

No comments:

Post a Comment