Monday 25 July, 2011

மாணவர்களும் நல்லொழுக்கமும்




கேள்வி: இக்கால மாணவ மாணவிகள் கெட்டு போவதற்கு எது காரணம் என்று எண்ணுகிறீர்கள். வெளிநாடுகளில் காணப்படும் இந்த சீரழிவு கலாசாரம் நம் இளம் தலைமுறையையும் பற்றி கொள்வதன் ரகசியம் என்ன?

பதில்: இப்போதுள்ள தலைமுறைக்கும், பழைய தலைமுறைக்கும் அதிக இடைவெளி ஏற்பட்டுவிட்டது. ஹை-டெக் சாதனங்களின் துணையுடன் மேல் நாட்டு நாகரீகம் அல்லது கலாச்சாரம் நமது வீட்டு வரவேற்பறைகளிலும்,படுக்கை அறைகளிலும் எட்டி பார்க்க தொடங்கிவிட்டது. சேட் வசதிகளும்,ஐ போன் மற்றும் முழு அளவிலான இணையதள தகவல் பரிமாற்றங்களும் இளைனர்களை கட்டி போட்டுவிட்டன. பேஸ்-புக் ஒரு படி மேலே போய் புதிய நண்பர்களையும் அவர்களின் வாலிப சேட்டைகளையும் விலாவாரியாக அலசும் அரட்டை-அரங்கமாக மாறிவிட்டது. தனது குழந்தைகள் தனது ஒய்வு நேரத்தை எப்படி செலவு செய்கிறார்கள் என்பதை பெற்றோர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. காதல் பரிவர்த்தனைகளிலும், உல்லாச கேளிக்கைகளிலும் அதிக ஈடுபாடு கொள்வது இளைனர்களை பொறுத்த வரை ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. நண்பர்கள் என்ற போர்வையில் ஆண்- பெண் நெருங்கி பழகும் தன்மை நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. இளைனர்களை தட்டி கேட்கும் நிலையில் தாய்- தந்தையரும் இல்லை. இந்த வரம்பு மீறல்களால் பாதிக்க படுவது பெண் குழந்தைகள் மட்டுமே. முறையான செக்ஸ் கல்வி பற்றி குழந்தைகளுக்கு இளமையிலேயே, அறிவுறுத்துவதும், பாதிக்கபட்டால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி சிறந்த மருத்துவர்களை கொண்டு போதிப்பதும், நல்ல ஒழுக்க சிந்தனைகளை மாணவர்களுக்கு எடுத்துரைப்பதன் மூலமும் இது போன்ற அவலங்களை தடுத்து நிறுத்த முடியும்.

No comments:

Post a Comment