Friday 22 July, 2011

தேர்வில் தோல்வியும் தற்கொலையும்




கேள்வி: பரீட்சையில் தோற்றாலோ அல்லது மதிப்பெண் குறைந்தாலோ இளம் மாணவர்கள் உயிரை மாய்ப்பது ஏன்? இந்த விபரீதத்தில் இருந்து இளைனர்களை காப்பது எப்படி?

பதில்: பெற்றோர்களும் சில நேரங்களில் ஆசிரியர்களும் இதற்கு காரணம் என்று சொல்லலாம். மார்க் குறைந்தால் திட்டுவது,கண் மூடித்தனமாக அடிப்பது என்பது இப்போதும் நிகழும் செயல் தான்.பெற்றோர் அடிப்பார்கள் அல்லது திட்டுவார்கள் என்பது தான் அவர்கள் எடுக்கும் இந்த துயர முடிவுக்கு காரணம். ஆத்திரத்தில் குழந்தைகளை அடிப்பதையும், கொடூரமாக திட்டுவதையும் பெற்றோர்கள் கைவிட வேண்டும். இது ஒன்றும் பெரிய தவறல்ல,முயன்றால் அடுத்த தேர்வில் வெற்றி பெற இயலும் என்பதை நயமாக எடுத்துரைத்து நம்பிக்கை ஊட்ட வேண்டும். இது குழந்தைகளின் பயத்தை நீக்கி தன்நம்பிக்கை வளர துணை புரியும். பள்ளிகளிலும் ,கல்லூரிகளிலும் தேர்வு நிகழ்வதற்கு முன் சிறந்த மன நல வல்லுனர்களை கொண்டு ஆலோசனைகளும்,நல்ல பயிற்சியும் வழங்கினால் இளம் மாணவர்களை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்ற இயலும்.

No comments:

Post a Comment