Sunday 24 July, 2011

பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லாவின் கேள்வி-பதில்கள்.


கேள்வி :குழந்தையை வளர்த்து சீர் படுத்த வேண்டிய தாய்-தந்தையரே தவறான வழியில் நடந்தால் அது குழந்தைகளின் மனதை பாதிக்குமா?ஒரு குழந்தை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் யார் கைகளில் இருக்கிறது? தாயின் நடத்தையிலா அல்லது தந்தையின் நடத்தையிலா?

பதில்: ஒரு குழந்தை உருவாவதில் இருந்து வளர்ந்து வாலிபன் ஆகும் வரை தாயின் அரவணைபிலேயே வாழ விரும்புகிறது.தாய் காட்டும் அன்பும், பாசமும், பரிவும் குழந்தையின் வாழ்வில் தாய் பால் உடல் வளர்ச்சிக்கு உதவுவது போல், இவை மன வளர்ச்சிக்கு அடிப்படை நல்மருந்தாய் அமைகின்றன. தாயின் நன்நடத்தையே குழந்தைக்கு தாயின் பால் மதிப்பையும்,மரியாதையையும் பெற்று தர உதவி புரிகின்றன. தவறு செய்யும் தந்தையை சமுதாயம் குறை கூறினால் கண்டு கொள்ளாத மகன் தன் தாயை பற்றி எவரும் குறை கூறினால் பொங்கி எழுகிறான். காரணம் நமது சமுதாயம் தாயிக்கு மிகுந்த கௌரவத்தை வாரி வழங்குகிறது. தாயை தெய்வத்துக்கு இணையாக நமது சமூகம் கருதுகிறது. தவறு செய்யாதவர் தன் தாய் என்றே எந்த குழந்தையும் எண்ணுகிறது. கற்பு நெறியை தன் தாயிடம் மிகவும் அதிகமாகவே எதிர்பார்க்கிறது. அது தவறும் போது எந்த மகனாலும் இதை ஜீரணிக்க முடிவதில்லை. மகன் தவறு செய்தால் தாய் தடுக்கலாம் - தாயே தவறு செய்தால் யார் தடுப்பது. சில சூழ்நிலைகளில் குழந்தைகளே இதை சரி செய்கிறார்கள். தவறு செய்தவர் தாயாக இருந்தாலும் சரியே.



No comments:

Post a Comment