கேள்வி: நவீன கால கட்டத்தில் காதல் திருமணம் செய்து கொள்வது தவறா? தன் மனம் இசைந்த மணமகனுடன் வாழ்க்கை நடத்துவதில் என்ன தவறு? இதற்காக மருமகனையே கொலை செய்வது என்ன நியாயம். குழந்தைகளை பெற்றோர்களின் கோர பிடியில் இருந்து காப்பது எப்படி?
பதில்: நீங்கள் அனுப்பிய பத்திரிகை செய்தியை நானும் பார்த்தேன். சற்று அதிர்ச்சியும் அடைந்தேன். கலீல் ஜிப்ரான் சொன்ன ஒரு வாசகம் எனக்கு நினைவுக்கு வந்தது. "உங்கள் எண்ணங்களை உங்கள் குழந்தைகள் மீது திணிக்காதீர்கள்-ஏனென்றால் அவர்களுக்கான எண்ணங்களை தயார் செய்யும் பக்குவம் அவர்களுக்கு உண்டு. இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், படித்த பக்குவம் நிரம்பிய, வயது வந்த ஆண்-பெண்களின் மன இயல்புகளை, அவர்களின் அந்தரங்க உண்மைகளை மனம் விட்டு பேசி நல்ல முடிவுகளை மேற்கொள்வது நல்ல தாய்-தந்தையரின் பண்பாகும். தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு அடித்தளம் அமைத்து கொடுப்பது பெற்றோர்களின் கடமை. தங்கள் குழந்தைகளின் வாழ்வில் தடங்கல்களையும், முட்டுக்கட்டைகளையும் ஏற்படுத்துவோர் நல்ல பெற்றோர்களாக இருக்க முடியாது. கண்களை இழந்தபின் சித்திரம் வாங்க இயலாது. குழந்தைகளை இழந்தபின் பெற்றோர்கள் சாதிக்க எண்ணுவது என்ன என்பதே நம் கேள்வி.
No comments:
Post a Comment