Thursday 21 July, 2011

படைப்பாற்றலை வளர்ப்பது எப்படி




கேள்வி: இக்காலத்தில் மாணவர்களை விட மாணவிகள் அதிக மார்க் எடுத்து முன்னிலை வகிக்கிரார்களே இது எதனால்? கல்வி கற்கும் திறனுக்கும் பெண்களின் மூளைக்கும் எதுவும் சம்பந்தம் உண்டா? அல்லது படிக்கும் ஆற்றலில் மட்டும் தான் பெண்கள் சிறந்து விளன்குகிறார்களா? மற்ற ஆற்றல்கள் அவர்களிடம் மிகவும் குறைவா?

பதில்:போட்டி அதிகம் மிகுந்த இந்நாட்களில் ஆண்களுக்கு சமமாக அல்லது ஆண்களை விட அதிகமாக தன்னம்பிக்கையும் , திறமையும் உள்ளவர்களாக பெண்கள் திகழ்கிறார்கள் என்று சொன்னால் அது மிகை இல்லை.அரசியல்,சயின்ஸ்,மருத்துவம்,பொறி இயல்,கம்ப்யூட்டர் என்று அவர்கள் கால் பதிக்காத துறைகளே இப்போது இல்லை எனலாம்.மனித அறிவாற்றலை பல விதமாக வகை படுத்தலாம். கல்வி திறனை அல்லது ஞாபக சக்தியை அதிகம் வளர்க்க உதவும் இடது பக்க மூளை பகுதியை இவர்களால் தூண்ட இயலும் என்பதும் ஒரு காரணம். வலது பக்க மூளையானது கிரியேடிவாக செயல் படும் ஆற்றல் உள்ளது. இது ஆண்களுக்கு சற்று அதிகம் என்று கூறலாம். இதனாலயே படைப்பாற்றல் அதிகம் உள்ளவர்களாக மாணவர்கள் விளங்குகிறார்கள். தலை சிறந்த இயக்குனர்கள்,கவிஞர்கள், இசை அமைப்பாளர்கள்,ஓவியர்கள்,கட்டடக்கலை நிபுணர்கள், மற்றும் பெரும் மேதைகளாக ஆண்கள் இருப்பதற்கும் இதுவே காரணம். பில் கேட்ஸ் கல்லூரி படிப்பை தொடராமல் விட்டதற்கும், ஆப்பிள் கம்ப்யூட்டர் இஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரியில் இருந்து விலகியதற்கும் அவர்களின் படைப்பு திறனே காரணம். எலெக்ட்ரிக் பல்பை கண்டு பிடித்த எடிசன் பள்ளி படிப்பை கூட தொடாதவர் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.படிப்பில் அதிக சாதனைகளை நிகழ்த்த விரும்புவோர் இடது பக்க மூளையை அதிகம் தூண்ட உதவும் சில பயிற்சிகளை மேற்கொண்டால் போதும். டீன் ஏஜ் மருத்துவர்களை தொடர்பு கொண்டால் இதை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment